- எடப்பாடி
- துணை முதலமைச்சர்
- உதயநிதி
- உதயநிதி ஸ்டாலின்
- விராலிமலை
- திமுக
- புதுக்கோட்டை மாவட்டம்
- கே.கே. செல்லபாண்டியன்
- விராலிமலை எடகுதி
- தமிழ்நாடு…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.கே.செல்லபாண்டியனை ஆதரித்து விராலிமலை செக்போஸ்ட் அருகே நேற்று காலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் 234 தொகுதிகளின் வெற்றியில் விராலிமலை ெதாகுதி வெற்றி முக்கியமானது. இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் யாரென்று உங்களுக்கு தெரியும். குட்கா புகழ் சொந்தக்காரர். நாடக கம்பெனி போல் செயல்பட கூடியவர். அவரை நம்பாதீர்கள். தேர்தல் முடிந்தவுடன் குவாரி தொழிலுக்கு சென்றுவிடுவார். அவர் ஐடி, ஈடி வழக்குகளை சந்தித்து வருகிறார். இதேபோல் அதிமுகவை ஈடி, ஐடி, சிபிஐ போன்ற அமைப்புகளை வைத்து பாஜ மிரட்டி கூட்டணி அமைத்துள்ளது. மோடியின் அடிமையாக எடப்பாடி செயல்படுகிறார். ஜாடிக்கு ஏற்ற மூடிபோல் மோடிக்கு எடப்பாடி உள்ளார். டெல்லி ரிமோட் மூலம் தமிழகத்தை இயக்கப்பார்க்கிறது. அதன் பியூசை பிடுங்க வேண்டும். தமிழ்நாடு எப்போதும் அவுட் ஆப் கண்ட்ரோல் தான். பத்து தோல்வி பழனிசாமினு சொல்வார்கள். இந்த தேர்தலில் தோற்கடித்து மொத்த தோல்வி பழனிசாமி என்று மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து புதுக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளரும், எம்எல்ஏவுமான மருத்துவர் முத்துராஜாவை ஆதரித்து புதுக்கோட்டை மாநகராட்சி திலகர் திடலில் நேற்று மதியம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: மாநில அரசுக்கு ஒன்றிய அரசு எந்த வகையிலும் துணையில் நிற்கவில்லை. கேட்கின்ற எந்தவித நிதியையும் ஒன்றிய அரசு கொடுக்க மறுக்கின்றனர். ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த திட்டங்களையும் அறிவிக்கவில்லை, தமிழ்நாட்டை பழி வாங்குகிற பாஜவை இந்த தேர்தலில் தமிழ்நாட்டிற்குள் நுழையவிடக்கூடாது. அதனால் தான் பாஜ நேரடியாக வராமல் அதிமுக என்ற முகமூடியை போட்டுக்கொண்டு வந்துள்ளது. முதலமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டிற்கான அனைத்து உரிமைகளையும் விட்டு கொடுத்தவர், மோடியின் முரட்டு அடிமை எடப்பாடி பழனிசாமி. ஏற்கனவே 10 தோல்வியை அவருக்கு கொடுத்துள்ளோம். 11 தோல்வி என்பதை குறிக்கும் வகையில் தான் இரண்டு விரல்களை காட்டி எடப்பாடி பிரச்சாரம் செய்து வருகிறார். அனைத்து தரப்பினருக்குமான அரசாக திமுக அரசு கடந்த 5ஆண்டுகளாக செயல்பட்டுள்ளது. தமிழ்நாட்டை எப்படியாவது கட்டுப்பாட்டில் வைக்க வேண்டுமென டெல்லி மோடி கூட்டம் எடப்பாடி பழனிசாமியை கைப்பாவையாக வைத்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
