- மேற்கு வங்கம்
- பாஜக
- கொல்கத்தா
- மேற்கு
- வங்காள சட்டமன்றத் தேர்தல்கள்
- ஜனாதிபதி
- சமிக் பட்டாச்சார்யா
- திரிணாமூல் காங்கிரஸ்
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ வென்றால் லவ் ஜிஹாத், லேண்ட் ஜிஹாத் ஆகியவை இருக்காது என்று பா.ஜ மாநில தலைவர் சமிக் பட்டாச்சார்யா தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில்,’ மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இது வங்காள இந்துக்களுக்கு மட்டுமல்ல, தேசியவாத, பகுத்தறிவுள்ள முஸ்லிம்களுக்கும் கடைசித் தேர்தல் என்று நான் கூறியுள்ளேன். மேற்கு வங்கத்தில் பாஜ ஆட்சிக்கு வந்தால் ‘லவ் ஜிஹாத்’ மற்றும் ‘லேண்ட் ஜிஹாத்’ ஆகியவற்றை நாங்கள் முடிவுக்குக் கொண்டு வருவோம். இது எங்கள் கடமை. அவர்கள் எங்களை மதவாதிகள் என்று அழைக்கட்டும், நாங்கள் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. மேற்கு வங்கத்தில் ‘லவ் ஜிஹாத்’ மற்றும் ‘லேண்ட் ஜிஹாத்’ ஆகியவற்றை யார் நடத்துகிறார்கள்? இது கவலைக்குரியதும் ஆபத்தானதும் ஆகும். நமது அனைத்து எல்லை மாவட்டங்களின் மக்கள்தொகை அமைப்பும் மாறிவிட்டது. மேற்கு வங்கத்தை ஒரு தளமாகப் பயன்படுத்தி, அதன் நிலம் மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மற்றும் பீகாரின் வனப்பகுதிகளின் மக்கள்தொகை அமைப்பை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது’ என்றார்.
