புதுடெல்லி: அமெச்சூர் குத்துச்சண்டை போட்டிகளில் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை மேரி கோம் (43), தொழில் முறை குத்துச் சண்டை போட்டிகளில் பங்கேற்பது குறித்து தீவிர பரிசீலனையில் உள்ளதாக நேற்று தெரிவித்தார்.
கடந்த 2012ம் ஆண்டு நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற மேரி கோம், முதல் முறையாக பதக்கம் வென்று அசத்தினார். தற்போது 43 வயதாகும் அவர், அமெச்சூர் குத்து சண்டை போட்டிகளில் ஆடுவதற்கான வயது வரம்பை தாண்டி விட்டது குறிப்பிடத்தக்கது.
