கிருஷ்ணகிரி, பிப்.18: சூளகிரியில் தினசரி சந்தையை ஏலம் எடுத்த குத்தகைதாரர் கூடுதல் கட்டணம் கேட்டு மிரட்டி வசூலிப்பதாக கலெக்டரிடம் திமுக எம்எல்ஏ முருகன்., தலைமையில் வியாபாரிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியிடம், வேப்பனஹள்ளி திமுக எம்எல்ஏ முருகன் தலைமையில், சூளகிரியில் தினசரி சந்தையில் கடை வைத்துள்ள கடைக்காரர்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூளகிரியில் தினசரி சந்தை நடந்து வருகிறது. சந்தை வளாகத்தில் 42 கடைகள் மற்றும் காலி இடத்தில் திறந்தவெளி கடைகள் அமைத்து அரசு நிர்ணயம் செய்த சுங்க வரி வசூல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது சுங்க வரி வசூல் செய்ய நடந்த ஏலத்தில் அதிமுகவை சேர்ந்த ராஜாராம் என்பவரது மனைவி சரஸ்வதி ஏலம் எடுத்தார்.