ராணுவவீரர் தற்கொலை

கொடைக்கானல் சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (36). ராணுவவீரர். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கார்த்திகேயன் குடும்பத்துடன் பெரியகுளத்தில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராணுவத்தில் இருந்து ஒரு மாத விடுமுறையில் ஊருக்கு வந்த கார்த்திகேயன் 2 நாட்களுக்கு முன்பு தந்தையை பார்ப்பதற்காக கொடைக்கானல் சீனிவாசபுரத்திற்கு வந்திருந்தார். அப்போது அவர் மனஅழுத்தத்தில் இருந்ததாகவும், இதற்காக மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கார்த்திகேயன் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை சந்திரசேகரன் அளித்த புகாரின்பேரில் கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: