கிருஷ்ணகிரி, பிப்.17: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி எருது விடும் திருவிழா மற்றும் எருதாட்டம் நடத்தப்படுவது வழக்கம். ஜனவரி 15ம் தேதி துவங்கும் இந்த விழாவானது, மார்ச் இறுதி வரை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பர்கூர் ஒன்றியம் எலத்தகிரி கிராமத்தில் நேற்று 25ம் ஆண்டு எருது விடும் திருவிழா நடந்தது. விழாவிற்கு பர்கூர் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் நாகராஜ், சுவிக்கின், பாலேப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெசிந்தாவில்லியம், வரட்டனப்பள்ளி முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் ஆரோக்கியஇருதயராஜ், திமுக ஊராட்சி செயலாளர் கண்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேஸ்வரி சோமசுந்தரம், பாலேப்பள்ளி துணை தலைவர் மாரம்மாள் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். இந்த விழாவினை எலத்தகிரி பங்குதந்தை மைக்கேல் ஆன்ட்ரூஸ், கிராம நிர்வாக அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.