ஓசூர், பிப்.17: ஓசூரில், வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகளை ஒதுக்கீடு செய்ததில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக திமுக எம்எல்ஏக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஓசூர் திமுக எம்எல்ஏ அலுவலகத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ, ஓசூர் எம்எல்ஏ சத்யா ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:ஓசூரில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் தனிநபர் வீடுகள் ஒதுக்கீடு செய்ததில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இதில் ராணுவ வீரர்கள் உள்ளிட்டவர்களுக்கு எந்த ஒதுக்கீடுகளையும் பின்பற்றாமல் இடைத்தரகர்கள் மூலம் அதிகாரிகள் முன்கூட்டியே சிலருக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்துள்ளளர். டிசம்பர் மாதம் வணிக வளாக கடைகளை ஒதுக்கீடு செய்ய நடந்த குலுக்கலில் பலகோடி முறைகேடு நடந்துள்ளது.