×

பணம் கடத்தலை தடுக்க செக்போஸ்ட்களில் பறக்கும்படை தீவிர சோதனை

 

திருப்புத்தூர், மார்ச் 21: திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள செக்போஸ்ட்களில் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த 15ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தேர்தல் அறிவித்த தேதியில் இருந்து தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் ரூ.50 ஆயிரத்திற்கும் மேலாக ரொக்க பணம் கொண்டு சென்றால் தகுந்த ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்.

Tags : Tiruputtur ,Tiruputtur assembly ,Election Commission ,Tamil Nadu assembly ,
× RELATED கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில்...