- கரூர் கோ தேசிய நெடுஞ்சாலை
- கரூர்
- வயபுரி நகர்
- கரூர்-கோய் தேசிய நெடுஞ்சால
- கரூர் டவுன்
- உதவியாளர்
- இன்ஸ்பெக்டர்
- விஸ்வநாதன்
கரூர். மார்ச் 21: கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் வையாபுரி நகர் அருகே இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கரூர் டவுன் போக்குவரத்து உதவி ஆய்வாளர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். சாலை விபத்துகளை குறைப்பது, உயிர் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் சட்டப்படி தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது
