தூத்துக்குடி: விளாத்திகுளத்தில் மாணவி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரனை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். வேடநத்தம் கிராமத்தில் 12ம் வகுப்பு மாணவி மார்ச் 10ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். மாணவியை வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரனை போலீசார் நேற்று கைது செய்தனர். ஜாமினில் வெளியே வந்த தர்ம முனீஸ்வரன், மாணவியை வன்கொடுமை செய்து கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது
