பேராவூரணி, பிப்.12: பேராவூரணியில் நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேராவூரணி நகரில் முக்கிய சாலையில் சுமார் 2 கி.மீ தூரத்திற்கு குண்டும், குழியுமாக, போக்குவரத்துக்கு பயனற்ற வகையில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும். தூசி படலத்தை உருவாக்கி, சுவாச பிரச்னையை ஏற்படுத்தும். சாலையில் குவிந்து கிடக்கும் மணலை அகற்ற வேண்டும். தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும். வணிகர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பயன்பெறும் வகையில், சாலையை செப்பனிட்டு, புதுப்பிக்க வேண்டும். மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைத்து, பாதசாரிகளுக்கு நடைமேடை அமைக்க வேண்டும். சாலையின் குறுக்கே, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பிகள், மின்மாற்றிகளை உரிய இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும்.