கும்பகோணம் : சுவாமிமலை அருகே திருவலஞ்சுழியில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை மீட்கப்பட்டது. காரில் வந்த நபர்கள் துணியில் சுற்றப்பட்ட நிலையில், ஆண் குழந்தையை கோயில் அருகே விட்டுச் சென்றுள்ளனர். குழந்தையை விட்டுச் சென்ற நபர்கள் குறித்து சுவாமிமலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
