சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் போட்டி என சசிகலா அறிவித்துள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிட உள்ளோம்.ஒருமித்த கருத்துகள் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடுவோம். நான் என்றைக்குமே மக்களோடு இருப்பேன் என்பதற்கு இந்த சின்னமே சாட்சி; நாங்கள் தனிமரமாக வரவில்லை; தோப்புடன்தான் வந்திருக்கிறோம் என அ.இ.பு.த.ம.மு.க கட்சியை தொடங்கிய சசிகலா தெரிவித்துள்ளார்.
