டெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தை அடுத்து மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. எல்.பி.ஜி. தட்டுபாடு தொடர்பாக விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவையில் நோட்டீஸ் கொடுத்தனர். தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரியும் மக்களவையில் எம்.பி.க்கள் நோட்டீஸ் வழங்கினர். விவாதம் நடத்தாமல் அவை தொடர்ந்து நடைபெற்றதால் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.
