×

அமெரிக்காவில் மனைவியை கொன்ற இந்தியர் பற்றி துப்பு தந்தால் ரூ.9 கோடி பரிசு தரப்படும்

நியூயார்க்: அமெரிக்காவின் மேரிலாந்தில் ஹனோவரில் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி டோனட் கடையில் கொடூர கொலை நடந்தது. பத்ரேஷ்குமார் சேத்தன்பாய் படேல் (35) என்ற இந்தியர் தனது மனைவி பாலக் படேலை (21) கத்தியால் பலமுறை குத்திக் கொலை செய்து விட்டு கடையின் பின்வாசல் வழியாக தப்பினார். 11 ஆண்டாகியும் படேல் எங்கிருக்கிறார், இந்தியா அல்லது கனடாவுக்கு தப்பி விட்டாரா என எப்பிஐயால் கண்டுபிடிக்க முடியவில்லை. பத்ரேஷ்குமார் படேல் பற்றி தகவல் தந்தால் ரூ.2.25 கோடி பரிசுத்தொகை அறிவித்தும் எந்த பலனும் இல்லை. இந்நிலையில், படேல் குறித்து தகவல் தருவோருக்கான பரிசுத்தொகையை எப்பிஐ ரூ.9 கோடியாக அதிகரித்துள்ளது.

Tags : US ,New York ,Hanover, Maryland, USA ,Bhadresh Kumar Chetanbhai Patel ,Palak Patel ,
× RELATED புதிய உச்ச தலைவரை எச்சரித்த விவகாரம்;...