புதுடெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோவின் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸ் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் விமானிகள் பற்றாக்குறை, புதிய பணியாளர் விதிமுறை காரணமாக ஏராளமான இண்டிகோ விமானங்கள் ரத்தாகி நாடு முழுவதும் பயணிகள் கடும் பாதிப்பை எதிர்கொண்டனர். இந்த சம்பவத்திற்கு 3 மாதத்திற்குப் பிறகு பீட்டர் எல்பர்ஸ் ராஜினாமா செய்துள்ளார். புதிய சிஇஓ நியமிக்கப்படும் வரை, நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராகுல் பாட்டியா அப்பொறுப்பை கவனிப்பார் என இண்டிகோ தெரிவித்துள்ளது.
