கரூர், பிப்.11: கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை செல்லும் சாலையில் சுங்ககேட் நிழற்குடை அருகே குடிநீர் குழாய் சீரமைப்பு பணி ஆமை வேகத்தில் நடந்து வருவதால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் திணறி வருகின்றன. இந்த பணிக்காக சாலையோரம் மெகா பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, மற்ற வாகனங்கள் இந்த பகுதியின் வழியாக எளிதாக செல்ல முடியாத நிலையும், நிழற்குடை அருகே மக்கள் நிற்க முடியாத நிலையும் நிலவி வருவதாக கூறப்படுகிறது.