×

8ம் வகுப்பு புத்தகத்தில் நீதித் துறையில் ஊழல் என்ற தலைப்பால் சர்ச்சை: மன்னிப்பு கோரியது NCERT

டெல்லி: ஒன்றிய அரசின் பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்து சர்ச்சை கருத்துக்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பகிரங்க மன்னிப்பு கோரியது. 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் நீதித்துறையில் ஊழல் என்ற பகுதியை திரும்பப்பெறுவதாக என்.சி.இ.ஆர்.டி அறிவித்துள்ளது. ஒன்றிய அரசின் 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் நீதித்துறையில் ஊழல் என்ற பகுதி சேர்க்கப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “இந்தியா மற்றும் அதற்கு அப்பால் – வகுப்பு 8 (பகுதி II)” [Exploring Society: India and Beyond Grade 8 (Part II)] என்ற சமூக அறிவியல் பாடப்புத்தகத்தை வெளியிட்டது. அதில் “நமது சமூகத்தில் நீதித்துறையின் பங்கு” (அத்தியாயம் IV) என்ற தலைப்பிலான பாடம் இடம்பெற்றிருந்தது.

மேற்குறிப்பிட்ட அத்தியாயம் IV-க்காக, NCERT-யின் இயக்குநர் மற்றும் உறுப்பினர்கள் இதன் மூலம் நிபந்தனையற்ற மற்றும் தகுதியற்ற மன்னிப்பைக் கோருகின்றனர். அந்தப் புத்தகம் முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளது மற்றும் தற்போது அது பயன்பாட்டில் இல்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : NCERT ,Delhi ,National Education Research and Training Council ,EU government ,N.Y. ,C. E. R. T ,Union ,
× RELATED ஒன்றிய அரசின் பாடப்புத்தகத்தில்...