சென்னை: பள்ளி மாணவர்களுக்கான பிரத்யேக பேருந்து சேவை, படிப்படியாக மாநிலம் முழுவதும் விரிவு செய்யப்படும் என அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 13,000 பேருந்துகள் வாங்க முடிவெடுத்து, 11,900 பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கு ஆணை வழங்கப்பட்டுவிட்டது. இதில், 8200 புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
