ஓமலூர், பிப்.10:விதை ஆய்வு துணை இயக்குநர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சேலம், நாமக்கல் மாவட்டத்தில் 1060 தனியார் விதை விற்பனை நிலையங்கள் மற்றும் நர்சரிகள் செயல்படுகிறது. விதை விற்பனை நிலையங்கள் அனைத்தும் விதை ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்படுகிறது. ஆய்வின்போது இருப்பு பதிவேடு, கொள்முதல் மற்றும் விற்பனை பட்டியல், காலாவதி பதிவேடு, விதைப்பகுப்பாய்வு முடிவு பதிவேடு, பதிவுச்சான்று, முளைப்புத்திறன் அறிக்கை முதலியவை சரிவர பராமரிக்கப்படுவதை விதை ஆய்வாளர்கள் உறுதி செய்கின்றனர். விதை விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு விதைகளை விற்பனை செய்யும்போது விதையின் பெயர், ரகம், காலாவதி தேதி, குவியல் எண், விதையின் அளவு ஆகியன அடங்கிய ரசீது வழங்கவேண்டும். விலைப்பட்டியலில் மேற்கூறிய விவரங்களுடன் விதை விற்பனையாளர் கையொப்பம், விவசாயிகள் கையொப்பம் பெற்றிருக்கவேண்டும்.