மும்பை: மகாராஷ்டிராவில் காலியாக உள்ள ஏழு இடங்களுக்கு வரும் 16ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சேர்ந்து ஒரே ஒரு எம்.பி.யை மட்டும் தான் தேர்ந்தெடுக்க முடியும். இந்த ஒரே இடத்துக்கு எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் என்சிபி(சரத் சந்திர பவார்) தலைவர் சரத் பவார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
