×

ஒவ்வொரு துறையிலும் திராவிட மாடல் அரசு சாதனை படைத்து வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

 

சென்னை: ஒவ்வொரு துறையிலும் திராவிட மாடல் அரசு சாதனை படைத்து வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் ஆங்கில வார இதழ் நடத்தும் கருத்தரங்கில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; எல்லோருக்குமான வளர்ச்சியை திராவிட மாடல் அரசு செய்து காட்டி இருக்கிறது. தமிழகம் அனைத்து துறைகளிலும் ஆல் ரவுண்டராக வளர்ந்துள்ளோம்; தமிழ்நாட்டில் ஆட்சிக்கு ஆதரவான அலை வீசுகிறது. ஒவ்வொரு துறையிலும் திராவிட மாடல் அரசு சாதனை படைத்து வருகிறது.

புதிய தொழில் முதலீடுகள் மூலமாக முன்னணி நிறுவனங்களின் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலமாக 3 கோடி மக்கள் பயன்பெறுகின்றனர். பெரு நகரங்களுக்கு நடுவே அழகிய பூங்காக்களை அமைத்துள்ளோம். 2ம் நிலை நகரங்களில் நியோ டைடல் பார்க் அமைத்து வருகிறோம். மாற்றுத்திறனாளிகளை உள்ளாட்சி அமைப்புகளில் நியமனம் செய்துள்ளோம். முத்திரை திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தும் மாநிலமாக வேறு எந்த மாநிலமும் இருக்காது.

இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் நம்பர் 1 மாநிலம் என்று ஒன்றிய பாஜக அரசே தமிழ்நாட்டை பாராட்டுகிறது. இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டிய ஒரே மாநிலம் தமிழ்நாடு; டபுள் எஞ்சின் என்று சொல்கிற டப்பா எஞ்சின் மாநிலங்களில் கூட இப்படி ஒரு வளர்ச்சியை காட்டிட முடியுமா? ஒன்றிய அரசின் உதவி இல்லாமலேயே சாதனை செய்து காட்டியுள்ளோம். யார் யாருக்கு தலைமை என்றே தே.ஜ.கூட்டணியில் இன்றும் தெரியவில்லைதே.ஜ.கூட்டணி ஆட்சி என மோடி கூறுகிறார்; அதிமுக ஆட்சி என எடப்பாடி கூறுகிறார் என்று கூறினார்.

Tags : Dravitha model government ,Chief Minister ,Mu. K. Stalin ,Chennai ,Dravita model government ,K. Stalin ,NUNGAMBAKKAM, ,MINISTER ,Government ,
× RELATED தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்​தேர்வு தொடங்கியது.