திருவாரூர் சற்குணேஸ்வரர் கோவில். தட்சனின் யாகத்திற்குப் பிறகு, பார்வதி தேவி இந்தத் தலத்தில் சிவபெருமானுடன் மீண்டும் இணைவதற்காகத் தவம் செய்தார். சிவபெருமானின் கவனத்தை ஈர்க்கவே அழகிய உருவம் கொண்டாள் தேவி. இத்தலத்தில் ஸ்ரீ சர்வாங்க சுந்தரி என்றழைக்கப்படுகிறாள். சிவபெருமான் முப்புரங்களை எரித்த பின் வெற்றியின் மகிழ்ச்சியில் கைகொட்டி ஆடிய நடனத்திற்கு ‘கொடுகொட்டி’ என்பதாகும். இதனை பிரபஞ்ச தாண்டவம் என்று சொல்கிறார்கள். இந்த நடனத்தை இத்திருத்தலத்தில் நிறைவேற்றினார். மரணத்தின் கடவுளான யமன் தன் பாவங்களில் இருந்து விடுபட குளம் உருவாக்கி இறைவனை இத்திருத்தலத்தில் வழிபட்டதாக ஸ்தல புராணம் கூறுகிறது. சற்குணன் என்ற அரசன் இங்குள்ள இறைவனை வழிபட்டான். எனவே, இறைவன் ‘ஸ்ரீ சற்குண நாதேஸ்வரர்’ என அழைக்கப்பட்டார். தீவிர சிவபக்தராக இருந்த மன்னன், இங்கு முக்தி அடைந்தார். அவர் மரணம் மற்றும் மறுபிறப்பு சுழற்சியில் இருந்து விடுவிக்கப்பட்டார். எனவே இந்த இடம் ‘கருவிலி’ எனப் பெயர்பெற்றது.
இந்திரன், யமன், தேவர்கள், ருத்ர கணங்கள் இங்குள்ள இறைவனை வழிபட்டுள்ளார். திருநாவுக்கரசர் தம் திருப்பாடலில் இத்தலத்தை ‘கருவிலி கொட்டித்தாய்’ என குறிப்பிட்டார். இங்குள்ள தெய்வத்திற்கு சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சனி மற்றும் கேது ஆகிய கிரகங்கள் நாமகரணம் செய்துள்ளன.
* சுக்கிரன் ஜாதகத்தில் 7,8,12ல் இருந்தால் திருமணத் தாமதம் உண்டாகும். அனுஷம் நட்சத்திரம் முதல் உத்திரட்டாதி நட்சத்திரம் வரை வெள்ளைச் சோளத்தை நைவேத்யமாக கொடுத்து இங்கு வரும் பக்தர்களுக்கு வழங்கினால், திருமணத் தாமதம் நீங்கி விரைவில் சுபகாரியங்கள் நடந்தேறும். அதுமட்டுமின்றி குடும்ப வாழ்வில் சிறப்புகள் உண்டாகும்.
* ஜாதகத்தில் 6,8, 12ல் கேது இருந்தால் இத்தலத்தில் சுவாமிக்கு நான்கு தேங்காய் உடைத்து வழிபட்டு வந்தால், பிறவியில்லா முக்தி – மோட்சம் அடைவதற்கான வழிகள் உண்டாகும்.
* புனர்பூசம் அல்லது பூரட்டாதி நட்சத்திர நாளில் விரளி மஞ்சளும் குங்குமப்பூவூம் சுவாமியின் அபிஷேகத்திற்கு கொடுத்து வழிபட்டால் செல்வச் செழிப்பு பெருகி ஐஸ்வர்யங்கள் உண்டாகும்.
* லக்னத்திற்கு 6, 8, 12ல் செவ்வாய் – சனி சேர்க்கை பெற்றவர்கள் இந்த ஸ்தலத்தில் பால் அபிஷேகத்திற்கு கொடுத்து, வெள்ளை மொச்சை பயறு நைவேத்யம் செய்து பசு மாட்டிற்கு உணவாகக் கொடுத்தால் நன்மை உண்டாகும்.
* ஐந்தாம் பாவகத்தில் (5ம்) சூரியன் இருப்பவர்கள் கோதுமை மாவும் வெல்லமும் கலந்து ஒன்பது உருண்டைகளாக பிடித்து சுவாமிக்கு நை வேத்யம் செய்து குரங்குகளுக்கு உணவாக கொடுத்தால் நவகிரகம் தோஷம் விலகும்.
