×

வருவாய்த்துறையினர் வேலைநிறுத்தம்

குமாரபாளையம், பிப்.25: வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவைத்துறைகளில் தற்காலிக தொகுப்பூதிய பணி நியமனங்களை உடனடியாக கைவிட வேண்டும். டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்படும் கிராம நிர்வாக அலுவலர்களின் கல்வித்தகுதியை பட்டப்படிபாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குமாரபாளையத்தில் வருவாய்த்துறையினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம உதவியாளர், நிர்வாக அலுவலர், அளவையர் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் வட்டாச்சியர் அலுவலகத்தில் நேற்று அனைத்து இருக்கைகளும் காலியாக கிடந்தது. அலுவலகம் வெறிச்சோடியது.

Tags : Revenue Department ,Kumarapalayam ,Revenue Disaster Management Department ,Survey ,TNPSC ,Kumarapalayam… ,
× RELATED வையப்பமலை பாலசுப்பிரமணிய சுவாமி...