தஞ்சை,பிப்.8: தஞ்சையில் மாநில அளவிலான கபாடி போட்டிக்கு வீரர்கள் தேர்வு நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் வருகிற 19, 20, 21 ஆகிய 3 நாட்கள் மாநில அளவிலான இளையோருக்கான கபடி போட்டி நடைபெறுகிறது.
தஞ்சை மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் நடைபெற்ற கபடி வீரர்கள் தேர்வு முகாம், தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்திலிருந்து 20 வயதுக்கு உட்பட்ட 200 ஆண்கள், 60 பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தனித்தனியாக கபடி போட்டி நடந்தது. இதில் இருந்து தலா 12 ஆண்கள், பெண்கள் தேர்வு செய்யப்படனர்.