×

‘‘தோபாருடா திடீர் ஞானோதயம்’’ ஒன்றிய அரசு நிதி வழங்காததால் 100 நாள் வேலை திட்டம் முடக்கம்: செங்கோட்டையன் குற்றச்சாட்டு

கோபி: 100 நாள் வேலைவாய்ப்பில் ஒன்றிய அரசு நிதி வழங்காததால், திட்டம் முடங்கி உள்ளதாக கே.ஏ.செங்கோட்டையன் குற்றம்சாட்டினார். ஈரோடு மாவட்டம், கோபி 1வது வார்டுக்குட்பட்ட வாய்க்கால் ரோடு பகுதியில், தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் பிரசாரத்தை இன்று துவங்கினார். பின்னர் அவர் அளித்தபேட்டி: 18 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் 95 சதவீதம் பேர் விஜய் தமிழகத்தை ஆள வேண்டும் என்பதைத்தான் நோக்கமாக சொல்கின்றனர். அந்த அடிப்படையில் விஜயின் சுற்றுப்பயணம் எழுச்சியோடு நடந்து வருகிறது. 100 நாள் வேலைக்கு 100 சதவீதம் மானியத்தை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்.

ஆனால், ஒன்றிய அரசு 60 சதவீதமும், 40 சதவீதம் மாநில அரசும் வழங்குவதாக குறிப்பிட்டுள்ளனர். இதனால், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் முடங்கியுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் என்டிஏ கூட்டணியினர் 150 நாட்கள் வேலை தருவதாக சொல்கின்றனர். என்டிஏ கூட்டணியில் உள்ளவர்களுக்கு ஏன் 100 சதவீதம் மானியம் கொடுக்கவில்லை என ஒன்றிய அரசை கேட்க துணிவில்லை என்றார்.அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் எப்போது தவெகவிற்கு வருகின்றனர்? என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள். குறிப்பிட்டு யாரையும் சொல்ல முடியாது. அப்படி சொன்னால், அவர் தவெகவிற்கு வருவதற்கு தடைகளை ஏற்படுத்துவார்கள். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

Tags : EU government ,Chengottian ,Kobe ,A. Sengkottian ,WAIKAL ROAD AREA ,GOBI 1ST WARD, EROD DISTRICT ,TAMIL ,NAGHAKA VICTORY CORPORATION'S EXECUTIVE COMMITTEE ,COORDINATOR ,K. A. Sengkottaiyan ,
× RELATED சட்டமன்ற வளாகத்தில் முதல்வர்...