திருவாரூர், பிப்.5: திருவாரூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஹெல்மெட் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஒரு மாத காலத்திற்கு நடத்திட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் கடந்த மாதம் 17ம் தேதி முதல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை சார்பில் ஹெல்மெட் அணிவது, சீட் பெல்ட் அணிவது மற்றும் சாலை விதிகளை கடைப்பிடிப்பது உட்பட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.