×

அவாஸ்குலர் நெக்ரோசிஸ்

நன்றி குங்குமம் டாக்டர்

ஆயுர்வேதத் தீர்வு!

சமீபத்தில் அவாஸ்குலர் நெக்ரோசிஸ் பாதிப்பு ஏற்பட்ட 36 வயது இளைஞருக்கு வெற்றிகரமான சிகிச்சை அளித்து, அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை இல்லாமலே அவரை மீண்டும் பழைய நிலைக்கு வலி இல்லாத வாழ்க்கைக்குத் திரும்பவும் உதவியுள்ளது அப்போலோ ஆயுர்வைட் மருத்துவமனை. அவாஸ்குலர் நெக்ரோசிஸ் பாதிப்பு என்பது என்ன.. எதனால் ஏற்படுகிறது.. அதற்கு தீர்வு என்ன போன்றவற்றை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் மூத்த மருத்துவர் ஸ்மிதா ஜெயதேவ்

அவாஸ்குலர் நெக்ரோசிஸ் (AVN) அல்லது ஆஸ்டியோனெக்ரோசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவில் சமீபகாலமாக 20-40 வயது இளைஞர்களிடையே அதிகரித்து காணப்படுகிறது. இந்த அவாஸ்குலர் நெக்ரோசிஸ் என்பது இடுப்பு எலும்பிற்கு ரத்த ஓட்டம் இல்லா நசிவு நிலையாகும். இந்த பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டால் அவருக்கு பெரும்பாலும் இடுப்பு எலும்பு அறுவைசிகிச்சை தவிர்க்க முடியாததாகும். இது பெரும்பாலும் ஆண்களையே அதிகம் பாதிக்கிறது. அவாஸ்குலர் நெக்ரோசிஸ் என்னவென்பதை முதலில் தெரிந்துகொள்வோம்.

அவஸ்குலர் நெக்ரோசிஸ் என்பது மூட்டுகளுக்கு அருகிலுள்ள எலும்பு திசுக்களுக்கு ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படக்கூடிய ஒரு நோயாகும். அதாவது எலும்புகளுக்கு போதுமான ரத்தம் கிடைக்காதபோது ஆக்ஸிஜன் சப்ளையில் தடை ஏற்பட்டு எலும்பு திசுக்கள் செயல் இழந்து இறந்துவிடும் நிலையாகும். இந்நிலையில், இறந்த திசுக்களால் எலும்புகள் உடைந்து அல்லது நொறுங்கக்கூடும் நோயாகும்.

இந்த நோய் உடலில் உள்ள எந்த எலும்பையும் பாதிக்கலாம். ஆனால் இது பெரும்பாலும் தொடை எலும்பையே அதிகம் பாதிக்கிறது. அதாவது தொடை எலும்பின் மேல் மற்றும் கீழ் பாகங்கள் அல்லது முனைகள் (மேல் பகுதியில் இடுப்பு அடங்கும் மற்றும் கீழ் பகுதியில் முழங்கால் அடங்கும்) இதனால், இந்நோய் ஏற்பட்ட ஒருவருக்கு நடக்கவோ, நிற்கவோ முடியாத நிலை ஏற்படுகிறது.

அவாஸ்குலர் நெக்ரோசிஸ் காரணங்கள்

எலும்பு முறிவுகள், சில நோய்கள் மற்றும் ரத்த ஓட்டத்தை பாதிக்கும் வாழ்க்கை முறை நடவடிக்கைகள், நீண்ட கால ஸ்டீராய்டு பயன்பாடு, புகைபிடித்தல், மது அருந்துதல், குட்கா போன்ற போதை வஸ்துகளின் பயன்பாடு, எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகமாக உண்பது மற்றும் உப்பு அதிகம் சேர்த்த உணவுகளை உண்பது போன்ற காரணங்களால் இந்த அவாஸ்குலர் நெக்ரோசிஸ் ஏற்படலாம். இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் மருத்துவ சிகிச்சை மூலம் எலும்பு திசுக்களுக்கு மீண்டும் புத்துயிர் அளித்து குணப்படுத்தலாம். அதுவே முற்றிய நிலைக்கு சென்றுவிட்டால் அறுவைசிகிச்சை ஒன்றே தீர்வாக இருந்து வருகிறது. இவ்வாறு அவாஸ்குலர் நெக்ரோசிஸ் முற்றிய நிலையில்தான் கடந்த ஏப்ரல் மாதம் 36 வயது இளைஞரான விமல் என்பவர் சிகிச்சைக்காக வந்தார்.

அவர் சிவில் என்ஜினியராக இருந்ததால் நீண்ட நேரம் நின்று பணிபுரிதல் மற்றும் இரவுப் பணிகள் மேற்பார்வையிடும் பணியை மேற்கொண்டு வந்தவர். அவருக்கு கொரோனாவுக்கு பிறகு, மெல்ல மெல்ல மூட்டுகளில் வலி தெரிய தொடங்கியிருக்கு. ஒரு கட்டத்தில் அவரால், ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு மேல் உட்காரவோ நிற்கவோ முடியாத நிலையிலும், தொடர்ச்சியான வலியின் காரணமாக அவர் நடக்கவும் மிகவும் சிரமப்பட்டார். அவர் நோயின் முற்றிய நிலையில் இருந்ததால், இடுப்பு மாற்று அறுவைசிகிச்சையே அவருக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அறுவைசிகிச்சை இல்லாமல் நோயை குணப்படுத்தக் கூடிய மாற்று மருத்துவத்தை தேடி எங்களிடம் வந்தார்.

அவரது வாழ்க்கைமுறை குறித்து விரிவான மருத்துவ மதிப்பீட்டிற்குப் பிறகு, சிகிச்சைக் குழு அமைத்து ஒரு துல்லியமான ஆயுர்வேத சிகிச்சை நெறிமுறையை உருவாக்கினோம். இந்த சிகிச்சை நெறிமுறை, நோயின் தீவிரம், தொடர்புடைய அபாய காரணிகள், தனிப்பட்ட உடல் தன்மை மற்றும் முன்கணிப்பு ஆகியவற்றை மதிப்பிட்ட பின் வடிவமைக்கப்பட்டது.

இந்த மருத்துவ சிகிச்சைத் திட்டம் எலும்புத் திசுக்களுக்கு ஊட்டமளித்தலையும் புத்துணர்வாக்கத்தையும் ஊக்குவிக்க அஸ்திபோஷக ரசாயனம், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் எலும்பின் விறைப்பைக் குறைக்கவும் மருந்து சேர்த்த மூலிகை எண்ணெய்கள் கொண்ட அப்யங்கம் மேலும் ஆழ்மட்ட தசை-எலும்பு நோயியல் மற்றும் மண்டல சமநிலையின்மைகளை நிவர்த்தி செய்வதற்காக பஸ்தி சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கியது.

10 மாத கால சிகிச்சைக்குப் பிறகு, வலி குறைதல், மூட்டு இயக்கத் திறன் ஆகியவற்றில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை நோயாளி கண்டார். தற்போது, அவர் வலியின்றி உள்ளார், இரு சக்கர வாகனத்தை ஓட்ட முடிகிறது, நீண்ட நேரம் நின்றிருக்க முடிகிறது, மற்றும் தனது குழந்தையைத் தூக்குவது மற்றும் பராமரிப்பது உள்ளடக்கிய குடும்ப வாழ்வில் தீவிரமாக பங்கேற்கவும் அவரால் முடிகிறது என்கிறார்.

தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட சிகிச்சை பெற்ற திரு. விமல் R, \”இது என் வாழ்க்கையின் ஒரு கடினமான கட்டமாக இருந்தது. சிறிய அன்றாட தேவைகளுக்குகூட குடும்பத்தை நான் சார்ந்து இருந்தேன். நிற்பது, நடப்பது அல்லது சில நிமிடங்கள் உட்காருவது போன்ற எளிய பணிகளுக்கும் ஆதரவு தேவைப்பட்டது, குறிப்பாக என் வயதில் இது ஏற்றுக்கொள்வதற்கு கடினமாக இருந்தது.

ஒரு இளம் பெற்றோராக, இடுப்பு மாற்று அறுவைசிகிச்சை மற்றும் அதனுடன் தொடர்புடைய நீண்ட குணமடைவு பற்றிய எண்ணம் மிகவும் சவாலாக இருந்தது. அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்வதற்கு முன்பு வேறு எந்த மாற்று வழி உள்ளதா என்று ஆராய நான் விரும்பினேன். அப்போலோ ஆயுர்வைட் பற்றி நான் அறிந்தேன் மற்றும் நல்ல நம்பிக்கையில் சிகிச்சை பெற முடிவு செய்தேன். காலப்போக்கில், முன்னேற்றம் தெளிவாகவும் தொடர்ச்சியாகவும் இருந்தது. இன்று, நான் என் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளேன், வேலை செய்ய முடிகிறது, சுதந்திரமாக நகர முடிகிறது, மற்றும் வலி இல்லாமல் என் குழந்தையை தூக்க முடிகிறது” என்று கூறினார்.

தொகுப்பு: ஸ்ரீ தேவிகுமரேசன்

Tags : Kungumam Dr. Ayurvedic Solution ,
× RELATED விபத்துக் காயங்களுக்கு சிறப்பான சிகிச்சை!