×

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் விற்பனை

ராஜபாளையம், பிப்.14: ராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் விற்பனைக்கு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு தென்னந்தோப்புகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தேங்காய்கள் விற்பனைக்கு தாயார் நிலையில் உள்ளன. ராஜபாளையம் ஜெயராமன் என்பவரது 4000 தேங்காய் விற்பனைக்கு தயாராக உள்ளது.

ராஜபாளையம் விவசாயி பிச்சை என்பவரது கொப்பரை தேங்காய் 47 கிலோ விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. தேவைப்படுவோர் விற்பனைக்கூட கண்காணிப்பாளரை 82484 05989 என்ற எண்ணிலும், மேற்பார்வையாளரை 70102 80754, 97903 87588 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளவும் என ராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Tags : Rajapalayam ,Rajapalayam Jayaraman ,
× RELATED ஓமலூர் வட்டாரத்தில் பூத்து குலுங்கும் மாமரங்கள்