மதுரை, பிப். 4: அண்ணாவின் 52வது நினைவு தினத்தையொட்டி, மதுரை நெல்பேட்டையில் உள்ள அவரது சிலைக்கு, திமுக மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பொன்.முத்துராமலிங்கம் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் வேலுச்சாமி, குழந்ைதவேலு, எஸ்ஸார்கோபி, பொன்.முத்துராமலிங்கம், தமிழரசி, ஜவகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கோ.தளபதி தலைமையில், பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஒச்சுப்பாலு, கணேசன், தனச்செல்வம், ஜெயராமன், சின்னம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அதிமுக சார்பில், மாநகர் மாவட்ட பொருளாளர் ராஜா தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்தனர். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட செயலாளர்கள் ஜெயபால், ராஜலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மதிமுக மாவட்ட செயலாளர் புதூர் பூமிநாதன் மற்றும் நிர்வாகிகள் மாலையணிவித்தனர். தேமுதிக மாவட்ட செயலாளர் கவியரசு தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.