×

அசாமில் பாஜ புகார் அளித்ததால் லட்சக்கணக்கான வாக்காளர் பெயர் நீக்கம்: முதல்வர் ஹிமந்தா தகவல்

கவுகாத்தி: விரைவில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ள அசாம் மாநிலத்தில் சிறப்பு திருத்த பணி நிறைவடைந்து இறுதி வாக்காளர் பட்டியலில் 2.43 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று கூறுகையில்,‘‘சிறப்பு திருத்த பணியின் போது லட்சக்கணக்கான சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். பாஜ தொண்டர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பலரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டது. இது வெறும் ஆரம்பம்தான். சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படும்போது இதுபோன்ற பலரின் பெயர்கள் நீக்கப்படும்.அசாம் ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு முதல் முறையாக, இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. சிலர் அச்சுறுத்தவும், பயமுறுத்தவும் முயன்றனர்.ஆனால் நாங்கள் முன்னேறிச் சென்று வெற்றி பெற்றோம்’’ என்று கூறினார்.

Tags : Assam ,BJP ,CM ,Himanta Biswa Sarma ,Guwahati ,Chief Minister ,
× RELATED இலவச அமரர் ஊர்தி இல்லாததால் தந்தையின்...