×

கூட்டணி கட்சிகளுடன் 22ம் தேதி முதல் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

சென்னை: தோழமை கட்சிகளுடன் வரும் 22ம் தேதி முதல் திமுக தொகுதி பங்கீட்டுக்குழு பேச்சுவார்த்தை தொடங்கும் என்று திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கை: நடைபெறவுள்ள 2026 சட்டப் பேரவைத் தேர்தலுக்கான களப்பணிகளில் கழக உடன்பிறப்புகள் சுற்றிச் சுழன்று பணியாற்றி வருகின்றனர். வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்த நடவடிக்கை நிறைவடைந்திருக்கிறது.இதற்காக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பார்வையாளர்கள் பகுதி, நகர, ஒன்றிய, கழக செயலளர்கள், நிர்வாகிகள் சார்பு அணியினர் வாக்குச்சாவடி முகவர்கள் குழுவினர் என லட்சக்கணக்கானோர், கடந்த சில வாரங்களாகத் தீவிர பணியாற்ற வந்துள்ளனர்.

ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை என்வாக்குசாவடி வெற்றி வாக்குச்சாவடி மேற்கு மற்றும் வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு டெல்டா மற்றும் தெற்கு மண்டல மகளிரணி மாநாடு என வெற்றிக்கனி பறிப்பதற்கான அடிப்படைப் பணிகளை அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருகிறார்கள். இனி வரும் நாட்களில் வீடு வீடாக வெல்லும் தமிழ்பெண்கள் பரப்புரையை மகளிர் படை மேற்கொள்ளவிருக்கிறது. மேலும் வாக்குச்சாவடி குழுவினருக்கு நான்கு பயிற்சி மாநாடுகள் திருச்சியில் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் மாநாடு என இடைவிடாத களப் பணிகள் ஒரு புறமும், திராவிட மாடல் அரசின் மூலம் அடுக்கடுக்கான நலத்திட்டங்களின் அமலாக்கம் மறுபுறமும் ஒவ்வொரு நாளும் நடந்து வருகின்றன.

தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு அமைக்கப்பட்டு அக்குழுவினர் தமிழ்நாடு சுற்றுப்பயணம் செய்து மக்களின் தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் அறிந்து வருகின்றனர். இதுவரையிலும் 75,000 கோரிக்கைகளும் பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளன. வரும் 17ம் தேதி தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு தொடர்ந்து அதன் மீதான விவாதம் நடைபெற இருக்கிறது. கழகத் தலைவர் விரைவில் அமைக்கப்படவுள்ள திமுக தொகுதி பங்கீட்டு குழுவானது சட்டப்பேரவை அலுவல்கள் நிறைவடைந்தவுடன் வரும் 22ம் தேதி முதல் தோழமை கட்சிகளுடன் தொகுதி பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்று தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : DMK ,Chennai ,
× RELATED ஒண்ணுக்கே வழியில்ல… விஜய்யை பொளந்து கட்டிய சண்முகம்