×

ஸ்ரீதர் வேம்பு உடனான விவாகரத்து வழக்கு தொடர்பாக அவரது மனைவி பிரமிளா சீனிவாசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: ஸ்ரீதர் வேம்பு உடனான விவாகரத்து வழக்கு தொடர்பாக அவரது மனைவி பிரமிளா சீனிவாசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். விவகாரத்து வழக்கில் இந்தியாவில் உள்ள சாட்சிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்ய ஆணையரை நியமிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளார். கலிபோர்னியாவில் நடக்கும் விவகாரத்து வழக்கில் தனக்கு உதவ ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.தனபால், ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப ஆணையிட்டுள்ளார். ஸ்ரீதர் வேம்பு தன்னையும், தனது மகனையும் கைவிட்டுவிட்டுச் சென்றதாக பிரமிளா மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.ஸ்ரீதர் வேம்பு -பிரமிளாவுக்கு கடந்த 1993ல் திருமணம் நடந்த நிலையில் 2021ல் விவாகரத்து கோரி வழக்கு தொடரப்பட்டது.

Tags : Sridhar Vembu ,Pramila Srinivasan ,Chennai High Court ,Chennai ,India ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி பட்ஜெட் கூட்டம்...