- கோவை,
- திருப்பூர்
- கோயம்புத்தூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம்
- ஒருங்கிணைப்பாளர்
- சக்திவேல்
- கோவை, திருப்பூர்
- கோயம்புத்தூர்
திருப்பூர்: கோவை, திருப்பூரில் நாளை முதல் 50% ஜவுளி உற்பத்தி நிறுத்தப்படுவதாக திருப்பூர், கோவை ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் அறிவித்துள்ளார். திருப்பூர், கோவை ஜவுளி உற்பத்தியாளர்கள் அதிகளவில் கழிவு பஞ்சுகளை பயன்படுத்தியே துணிகளை விசைத்தறிகள் மூலமாக தயாரித்து வருகின்றனர். இந்த கழிவு பஞ்சுகளின் விலையானது சுமார் 20% சதவீதம் அளவிற்கு கடந்த 3 மாதங்களில் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக துணிகளின் விலையை உயர்த்த முடியாமல் ரூ.100 கோடி மதிப்பிலான துணிகள் தேக்கமடைந்துள்ளது.
மேலும் தேக்கம் அதிகரிக்கும் என்பதால் நாளை முதல் துணிகள் உற்பத்தியானது 50% சதவீதம் குறைக்கப்பட்டு 30% சதவீதம் வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். தொடர்ந்து ரூ.160 நல்ல பஞ்சு விற்கக்கூடிய சூழ்நிலையில் அதில் இருந்து பெறப்படக்கூடிய கழிவு பஞ்சுகளின் விலை ரூ.130 அளவிற்கு விற்கப்படுவதாகவும், சராசரியாக 50%சதவீதம் மட்டுமே விற்கப்பட வேண்டிய சூழ்நிலையில் 80% சதவீதம் அளவிற்கு கழிவு பஞ்சுகள் விலை இருப்பதால் தொடர்ந்து அதனை துணியாக மாற்றி விற்க முடியாத சூழல் நிலவுவதாகவும் இதன் காரணமாக வர்த்தகத்தில் பெரும் அளவு சந்தேக தன்மை எழும் என்பதாகவும் நம்பகத்தன்மை இல்லாத சூழலில் தொடர்ந்து உற்பத்தி செய்து துணிகள் தேக்கமடை செய்ய முடியாது என்பதால் இந்த உற்பத்தி நிறுத்த போராட்டம் அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
