டூவீலருடன் கிணற்றில் விழுந்து வாலிபர் பலி

போச்சம்பள்ளி, பிப்.3:திருப்பத்தூர் மாவட்டம் காசிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார்(20), கட்டிட மேஸ்திரி. இவரது நண்பர் சுரேஷ்(20). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் வேலம்பட்டியில் எருது விடும் விழாவை பார்த்து விட்டு இரவு டூவீலரில் புள்ளம்பட்டி மத்தூர் சாலையில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தனர். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் சாலையோரத்தில் இருந்த புதர்மண்டிய கிணற்றில் பாய்ந்தது. இதில், அருண் சம்பவயிடத்திலேயே பலியானார். சுரேசுக்கு நீச்சல் தெரிந்ததால், மேலே ஏறி தப்பி வந்தார். இதுகுறித்து அக்கம், பக்கத்தினர் போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவயிடம் வந்த தீயணைப்பு அலுவலர் பிரபாகரன் தலைமையிலான வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் அருண்குமாரை சடலமாக மீட்டனர். இதுகுறித்து, மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: