தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 630 மெகா வாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டது. அனல் மின்நிலையத்தின் 5வது அலகில் கொதிகலனில் பழுது ஏற்பட்டதால் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஏற்கனவே தீ விபத்து காரணமாக 1 மற்றும் 2வது அலகுகளில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 1, 2 மற்றும் 5 ஆகிய 3 அலகுகளில் மொத்தம் 630 மெகா வாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
