சென்னை: முகவரி மாற்றுதல், வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம், புகைப்பட அடையாள அட்டை மாற்றம் செய்ய, மாற்றத்திறனாளி வாக்காளர்கள் என குறிப்பது ஆகிய கோரிக்கை உடையவர்கள் படிவம் 8 மூலம் 24,47,142 படிவங்களும், 10,28,575 இணையவழியில் என 34,75,717 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிக்கை: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, கணக்கீட்டு கட்டத்தின் போது கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பித்த வாக்காளர்களின் பெயர்களை உள்ளடக்கிய வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பர் 19ம் வெளியிடப்பட்டது.
கடந்த டிசம்பர் 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் கடந்த டிசம்பர் 19ம் தேதி முதல் ஜனவரி 30ம் தேதி வரையிலான காலகட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத குடிமக்கள் மற்றும் 18 வயது நிரம்பிய தகுதியுடைய வாக்காளர்கள் தங்கள் பெயரை பதிவு செய்ய, படிவம் 6ஐ நிரப்பி உறுதிமொழி படிவத்துடன் விண்ணப்பித்துள்ளனர். முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்க அல்லது ஏற்கனவே உள்ள பதிவை நீக்க படிவம் 7ஐ சமர்ப்பித்துள்ளனர்.
முகவரி மாற்றுதல், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்ய, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம் செய்ய, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிப்பது ஆகிய கோரிக்கை உடையவர்கள் படிவம் 8 மூலம் விண்ணப்பித்துள்ளனர். கடந்த டிசம்பர் 19ம் தேதி முதல் கடந்த 30ம் தேதி வரையிலான ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில் பின்வரும் எண்ணிக்கையிலான படிவங்கள் நேரடியாக பெறப்பட்டுள்ளது. அதன்படி 24,47,142 படிவங்களும், இணையவழியில் 10,28,575 என 34,75,717 விண்ணப்பங்களும், மாவட்ட அளவில் தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் செயலாக்கப்பட்டு, அதன்பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 17ம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
