×

மாபெரும் தமிழ்க் கனவு திட்டம்; ஆசிரியர்களுக்கு பயிற்சிப்பட்டறை

சென்னை: உயர்கல்வித் துறைச் செயலர் சங்கர் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
தமிழ் மண்ணின் சிறப்புகளை இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதற்காக மாபெரும் தமிழ்க் கனவு திட்டத்தின் கீழ் பயிற்சிப் பட்டறைகள் நடத்தலாம் என கல்லூரிக் கல்வி ஆணையர் அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். அதில் பயிற்சிக்கான செயல்திட்டத்தையும் குறிப்பிட்டுள்ளார். அதன்படி நிகழ் கல்வியாண்டில் 1,200 ஆசிரியர்களை கண்டறிந்து, பயிற்சி பட்டறைகள் நடத்தப்படும். அதனை, சென்னை, கோவை, திருச்சி, மதுரை என 4 மண்டலங்களாகப் பிரித்து மாதம் ஒரு பயிற்சிப் பட்டறை என்ற அளவில் மூன்று மாதங்களில் மொத்தம் 12 அணிகளுக்குப் பயிற்சியளிக்கப்படும் விதத்தில் ஓர் அணியில் சராசரியாக 100 பேருக்கு இரு நாள்கள் உண்டு, உறைவிடப் பயிற்சி அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

ஆணையரின் கருத்துருவினை கவனமுடன் ஆய்வு செய்த அரசு, மாபெரும் தமிழ்க் கனவு திட்டத்தின் கீழ் 1,500 ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை நடத்துவதற்கான அனுமதியும், அதற்கு செலவினமாக ஒரு நிகழ்வுக்கு 7 லட்சத்து 56,250 வீதம் 12 நிகழ்வுகள் நடத்துவதற்கு ரூ.1 கோடியே 8 லட்சத்து 75 ஆயிரம் நிதி ஒப்பளிப்பு வழங்கியும் ஆணையிடுகிறது என அதில் தெரிவித்துள்ளார். மாபெரும் தமிழ்க்கனவு திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதிலும் உள்ள கல்லூரிகளில், மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் துறை சார்ந்த நிபுணர்கள், எழுத்தாளர்கள் மற்றும் அறிஞர்களைக் கொண்டு சிறப்புச் சொற்பொழிவுகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai ,Shankar ,Tamil ,
× RELATED மண்ணிலே கலைவண்ணம் காணும் மண்பாண்ட...