×

மறு ஆய்வு குழுவுக்கு படத்தை அனுப்பிய விவகாரம்; ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு

சென்னை: நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்று வழங்குவது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. விஜய் நடித்த ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழங்க கோரி படத்தை தயாரித்த நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, உடனடியாக தணிக்கை சான்று வழங்குமாறு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து பட தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை ஜனவரி 20ம் தேதி விசாரித்து உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 20ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்சார் போர்டு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.

Tags : Democrat ,Chennai ,Chennai High Court ,Vijay ,Court ,
× RELATED மண்ணிலே கலைவண்ணம் காணும் மண்பாண்ட...