சண்முகநாதன் எம்எல்ஏ முன்னிலையில் சிவகளை வாலிபர்கள் அதிமுகவில் இணைந்தனர்

ஏரல், ஜன. 29:  சிவகளை பகுதியைச் சேர்ந்தவர்கள் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் எம்எல்ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். ஏரல் அருகே சிவகளையைச் சேர்ந்த பழ வியாபாரி  நாராயணன், ரமேஷ், சரவணன், ராஜா உட்பட 10பேர் வாலிபர்கள் பண்டாரவிளையில் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் எம்எல்ஏவை சந்தித்து சால்வை அணிவித்து அதிமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் வை. ஒன்றிய செயலாளர்கள் மேற்கு காசிராஜன், கிழக்கு அழகேசன், தெற்கு மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் திருத்துவசிங், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் எப்றாயீம், பெருங்குளம் நகர செயலாளர் வேதமாணிக்கம், வை. ஒன்றிய ஜெ. பேரவை செயலாளர் பாஸ்கர், மாவட்ட விசாய பிரிவு துணை தலைவர் பால்துரை, சிவகளை முன்னாள் பஞ்சாயத்து தலைவர் நாராயணன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: