×

மாம்பழ சின்னத்தை பயன்படுத்துவதா? பிரதமரின் கூட்டத்தில் அதிகார துஷ்பிரயோகம்: ராமதாஸ் கொதிப்பு

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: மதுராந்தகத்தில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரசார தொடக்க விழாவில், நான் நிறுவிய பாட்டாளி மக்கள் கட்சியின் வரலாற்றுச் சின்னமான ‘மாம்பழம்’ சின்னம் மேடையின் பின்னணியில் பயன்படுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, தற்போது பாட்டாளி மக்கள் கட்சிக்குள் நிலவும் தலைமைப் போட்டியால் ‘மாம்பழம்’ சின்னம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ள ஒரு பிரிவினர் (அன்புமணி தரப்பு), தேர்தல் ஆணையத்தால் இன்னும் அங்கீகரிக்கப்படாத ஒரு சின்னத்தை, நாட்டின் பிரதமரே பங்கேற்கும் ஒரு பொதுக்கூட்ட மேடையில் காட்சிப்படுத்துவது சட்ட விரோதமானது மற்றும் அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம்.
தேர்தல் ஆணையத்தின் வசம் நிலுவையில் உள்ள ஒரு சின்னத்தை மேடையில் பயன்படுத்துவது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. பிரதமர் பங்கேற்கும் ஒரு நிகழ்வில், நடந்தத இது சட்ட விரோதச் செயல்.

Tags : Ramadoss ,Chennai ,PMK ,National Democratic Alliance ,Madhurantakam ,Patali Makkal Party ,
× RELATED ஓபிஎஸ் எங்களுடன் வருவார்: டிடிவி தினகரன்