ஈரோடு, ஜன.29: ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு நேற்று மாடுகள் வரத்தும், விற்பனையும் அதிகரித்தது.ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடி அருகே வியாழன்தோறும் மாட்டு சந்தை கூடும். இந்த சந்தைக்கு வரத்தாகும் மாடுகளை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா போன்ற வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று கூடிய மாட்டு சந்தையில் கடந்த வாரத்தை காட்டிலும் வரத்து அதிகமாக இருந்தது. அதன்படி, நேற்று கூடிய சந்தையில் பசு-450, எருமை-300, கன்று-100 என 850 மாடுகள் வரத்தானது. இதில், பசு மாடு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரையும், எருமை மாடு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும், கன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையும் விற்பனையானது.