×

ஆந்திர பேருந்தில் குட்கா கடத்தியவர் கைது

காஞ்சிபுரம், ஜன.21: சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், பொன்பாடி சோதனைச்சாவடியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திர மாநிலம், திருப்பதியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கிச் சென்ற ஆந்திர பேருந்தில் சோதனை செய்தனர். இதில், தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் கடத்திச் சென்ற நபரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து, திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த செல்வம் (46) என்பவரை கைது செய்து 15 கிலோ குட்கா பறிமுதல் செய்தனர்.

Tags : Andhra bus ,Kanchipuram ,Ponpadi ,Chennai-Tirupathi National Highway ,Andhra ,Tirupati, Andhra Pradesh ,
× RELATED செம்மஞ்சேரியில் உலக தரத்தில் ரூ.261 கோடியில் விளையாட்டு நகரம்