அரூர், ஜன.28: கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காவேரிப்பட்டணம் தேசிசெட்டி தெருவில் இயங்கி வந்த ஆதர்ஷ் மருத்துவமனை, தற்போது சஞ்ஜ் ஆதி என்ற பெயரில் நரிமேடு ரோடு சேலம் பைபாஸ் சாலையில் திறக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை கட்டிடத்தை ஆதர்ஷ், சஞ்சனா ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இந்திராணி தனபால், அஸ்வதி வெங்கடேசன், கண்ணகி கமலநாதன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். விழாவில் மருத்துவர் கமலநாதன், டாக்டர் வெங்கடேசன், அரூர் சூர்யா கிரானைட்ஸ் நிர்வாகி தனபால் ஆகியோர் வரவேற்றனர். டாக்டர்கள் பாபு சக்ரவர்த்தி, இந்துபாலா, சித்தார்த், சாம்பவி, பிரபு, சூர்யா, பிரணவ், பிரத்திவ், கலைதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ...