கிருஷ்ணகிரி, ஜன.28: கிருஷ்ணகிரி அடுத்த கும்மனூரில் நடந்த எருதுவிடும் திருவிழாவில் 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
கிருஷ்ணகிரி அடுத்த கும்மனூர் கிராமத்தில் 5ம் ஆண்டு எருது விடும் திருவிழா நேற்று காலை தொடங்கி, மதியம் 2 மணிக்கு நிறைவடைந்தது. இந்த விழாவினை திமுக மாநில விவசாய அணி துணைத் தலைவர் மதியழகன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். ஊர்கவுண்டர் வீரப்பன், மந்திரிகவுண்டர் கிருஷ்ணன், ஊர் கணக்குப்பிள்ளை முருகேசன், வரி கவுண்டர்கள் பெரியசாமி, மாதையன், பெருமாள், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.