×

நீண்ட நாட்களாக நோயால் அவதி; மகளை கத்தியால் கழுத்தறுத்து கொன்று தற்கொலைக்கு முயன்ற மாஜி எஸ்.ஐ.: விழுப்புரம் அருகே இன்று பயங்கரம்

 

விழுப்புரம்: விழுப்புரம் அருகே நீண்ட நாட்களாக நோயால் அவதிப்பட்ட மகளை அவரது தந்தை கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் கோதண்டராமன்(70). காவல்துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி செல்வி(60). இவர்களுக்கு கலையரசி(35), சுமலதா(33) ஆகிய இரண்டு மகள்கள். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இரண்டாவது மகள் சுமலதாவை கோலியனூர் அருகே உள்ள குருமங்கோட்டை கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்தனர். அவருக்கு உடல்நலம் சரியில்லாததால் தாய் வீட்டில் வசித்து வந்தார். அவருடன் அவரது 7 வயது மகளும் தங்கி உள்ளார். புதுவை ஜிப்மர் உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் சுமலதாவுக்கு குணமாகவில்லை. இதனால் அவரது தந்தை கோதண்டராமன் மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் கோதண்டராமன் தனது மனைவி செல்வியை, நீ நடைபயிற்சிக்கு சென்று விட்டு வா… என்று கூறி அவரை அனுப்பி விட்டார். பின்னர் மகள் சுமலதா அருகில் சென்ற கோதண்டராமன் கையில் வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்து உள்ளார். வலி தாங்க முடியாமல் கத்திய அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். சிறிது நேரத்தில் சுமலதா பரிதாபமாக இறந்தார். இதனால் பயந்துபோன கோதண்டராமன் தனது கைகள் மற்றும் கழுத்தில் அதே கத்தியால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனிடையே சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது சுமலதா தரையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். கோதண்டராமன் கையில் கத்தியுடன் ரத்த காயங்களுடன் நின்று கொண்டிருந்தார்.

உடனே அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் வரவழைத்து கோதண்டராமனை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தகவல் அறிந்து வந்த கண்டமங்கலம் போலீசார் கொலை செய்யப்பட்ட சுமலதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற மகளை தந்தையே கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுமலதா கொலை செய்யப்பட்டதை அறிந்த அவரது கணவர் மணிமாறன் கோலியனூரில் இருந்து கண்டமங்கலம் வந்தார். மனைவியின் சடலத்தை பார்த்து அவரும், குழந்தையும் கதறி அழுதது பரிதாபமாக இறந்தது.

Tags : Maji S. ,Viluppuram ,Godandaraman ,Indiranagar ,Viluppuram District Kandamangalam ,
× RELATED திருமணம் செய்ய மறுத்தவரை கைது செய்ய...