×

ஆசிட் குடித்த தொழிலாளி சாவு

கிருஷ்ணகிரி, ஜன.26: கந்திக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஏகநாதன் (47). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர். மதுஅருந்தும் பழக்கம் உள்ள ஏகநாதன்,  கடந்த 21ம் தேதி மதுபோதையில் வீட்டில் இருந்த ஆசிட்டை எடுத்து குடித்துள்ளார். குடும்பத்தினர் அவரை மீட்டு பர்கூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து, கந்திகுப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு