மன்னார்குடி, ஜன. 26: தஞ்சை புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ரமேஷ் (48). ஹோட்டல் அதிபரான இவர் தனது நண்பர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள காரில் நேற்று காலை மன்னார்குடி வந்தார். நெடுவாக்கோட் டை அருகே உள்ள கல்யாண மண்டபத்தின் எதிரே சாலையோரத்தில் தனது காரை நிறுத்தி விட்டு மண்டபத்திற்கு உள்ளே சென்று விட்டார். அப்போது, வடுவூரில் இருந்து மன்னார்குடி நோக்கி வந்த லாரி டிரைவர் கட்டுப் பாட்டை இழந்து கல்யாண மண்டபம் எதிரே சாலையோரம் நின்ற ரமேஷ் காரின் மீது பயங்கரமாக மோதி கவிந்தது. காரில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் இல்லை. இருப்பினும் கார் அப்பளம் நசுங்கியது. லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பியோடி விட்டார்.