வேதாரண்யம், ஜன. 26: வேதாரண்யம் வட்டம் ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் ரூ.150 கோடியில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான பூமிபூஜை விழா நடந்தது. நாகை எம்பி செல்வராசு தலைமை வகித்தார். கலெக்டர் பிரவீன்.பி.நாயர் முன்னிலை வகித்தார். மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான பூமிபூஜையை துவக்கி வைத்து அடிக்கல் நாட்டிய பின் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்ததாவது:
ஆறுகாட்டுத்துறையில் மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு துறைமுகம் இல்லாததால் 2014ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையால் மீன்பிடி படகுகள் சேதமடைந்தது. 2018ம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் மீனவ மக்கள் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஆறுகாட்டுத்துறையில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான கடல் நீரியல் ஆய்வு மற்றும் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தம் செய்வது தொடர்பான மாதிரி ஆய்வுகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டது.