கன்னியாகுமரி, ஜன.26: குடியரசு தின விழாவையொட்டி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நேற்று ரக்ஷாகிரீன் ஆப்பரேஷன் என்ற தீவிரவாதிகள் ஊடுருவதல் தடுப்பு பணியில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் போலீசார் அதிநவீன ரோந்து படகுகளில் கடலில் ரோந்து சென்றனர். கூடன்குளம் அணுஉலையின் பின்பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து 27ம் தேதி மாலை 5 மணி வரை இந்த ஆப்பரேஷன் நடக்கிறது. மேலும் கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கட்டாயமாக அரசால் அனுமதிக்கப்பட்ட படகில் தான் செல்ல வேண்டும். அரசு வழங்கிய அடையாள அட்டை வைத்திருக்க ேவண்டும் என கூறியுள்ளனர். மேலும் சந்தேகப்படும்படியான படகுகள் அல்லது புதிய நபர்கள் தென்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.